Friday 16 November 2012

மண்ணைப் பொன்னாக்கும் மலைவேம்பு !

            நட்டு வைத்த மரம், பொட்டியில் கட்டி வைத்த பணத்துக்கு ஒப்பானது. இந்த உலகில் பலகோடி மரங்கள் இருந்தாலும், நமது மண்ணுக்கேற்ற, விலை மதிப்புள்ள, விவசாயிகளுக்கு குறுகிய காலத்தில் பயனளிக்கக் கூடிய முக்கியமான சில மரங்களைப் பற்றி இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம். அதில் முதலாவது... முக்கியமானது... மிக வேகமாக வளரக்கூடிய மலைவேம்பு!






ஒரு வருடத்தில் தோப்பாகும்! 


மலைவேம்பு குறுகிய காலத்தில் மற்ற மரங்களைவிட அதிக வருமானம் தரக்கூடியது. குறைந்த அளவு நீர்வளம் உள்ள பகுதிகளிலும் நன்றாக வளரும். பராமரிப்பதும் சுலபம். நடவு செய்த 3-ம் ஆண்டில் காகித ஆலைக்கு அனுப்பிவிட முடியும்; 4-ம் ஆண்டு என்றால், தீக்குச்சி தயாரிப்பதற்காகக் கொடுத்துவிட முடியும்; 5, 6-ம் ஆண்டுகள் என்றால்... பிளைவுட் தயாரிக்கும் நிறுவனங்கள் தேடி வரும். 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால், அனைத்து மரச் சாமன்களைச் செய்வதற்கும் பயன்படுத்தலாம். 

ஆக, தேவையைப் பொறுத்து எந்த நிலையில் வேண்டுமானாலும், இந்த மரத்தை விற்று பணமாக்க முடியும்! நடவு செய்த ஓராண்டுக்குள்ளாகவே தோப்பாக மாறிவிடும் அளவுக்கு இதன் வளர்ச்சி அபரிமிதமானது. 


 ஏக்கருக்கு 200 மரங்கள்! 

சரி, வணிகரீதியாக இதனை சாகுபடி செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம். வடிகால் வசதி கொண்ட அனைத்து நிலங்களிலும் வளரும். என்றாலும், மணல் கலந்த வண்டல் மண் பூமியில் சிறப்பாக வளரும். 23 முதல் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், 5 முதல் 7 வரையிலான கார அமில நிலை உள்ள மண்ணும் இதற்கு ஏற்றது.

 நிலத்தை நன்கு உழவு செய்து 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் இரண்டு அடி நீளம், அகலம் மற்றும் ஆழமுள்ள குழிகளை எடுத்து நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்தால், ஏக்கருக்கு 200 கன்றுகள் தேவைப்படும். ஒவ்வொரு குழியிலும் மண்புழு உரம்- ஒரு கிலோ, வேர்வளர்ச்சி உட்பூசணம்-30 கிராம் (வேம்), மட்கிய தொழுவுரம்- ஒரு கிலோ, அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா-தலா 15 கிராம் ஆகியவற்றைப் போட்டு, பையில் உள்ள கன்றுகளை மண் கட்டி உடையாமல் பிரித்து நடவேண்டும். செடிகளின் வேர்ப்பகுதி பூமியின் மேல்பகுதியில் தெரியாதவாறு, மேல்மண்ணைக் கொண்டு குழிகளை மூடவேண்டும். நிலம் முழுக்க இதை நடவு செய்ய முடியாதவர்கள், வரப்பு ஓரங்களில் 10 அடி இடைவெளியில் நடவு செய்யலாம். 

மேற்சொன்ன அடிப்படையில்தான் வனவிரிவாக்கத்துறை பரிந்துரை செய்கிறது. ஒரே மாதிரியான அளவில் மரங்கள் கிடைக்க இதைக் கடைபிடிக்கலாம். ஆனால், விவசாயிகள் 10 அடிக்கு 10 அடி இடைவெளியில், ஏக்கருக்கு 400 கன்றுகள் வரையிலும்கூட நடவு செய்கிறார்கள். பெருத்திருக்கும் மரங்களை சீக்கிரமே வெட்டிவிட்டு, மற்ற மரங்களை மேலும் வளரவிட்டு பிற்பாடு வெட்டி விற்பனை செய்கிறார்கள்.


3 வருடம் வரை ஊடுபயிர் செய்யலாம்! 

வாரம் ஒரு தண்ணீர் கொடுத்தால் நல்லது. 10 நாட்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் கொடுப்பது அவசியம். முதல் 2 ஆண்டுகளில் மழைக் காலத்துக்கு முன்னதாக கன்றுகளைச் சுற்றி களை எடுத்து, மண்ணைக் கொத்தி விட்டால் வளர்ச்சி அதிகரிக்கும். இந்த மரத்தின் இலைகள் மற்றும் கிளைகளின் அடர்த்தி குறைவாகவே இருக்கும். எனவே, நடவு செய்த முதல் 3 ஆண்டுகள் வரை தண்ணீர் வசதியைப் பொறுத்து மஞ்சள், உளுந்து, வாழை, காய்கறிகள் போன்றவற்றை ஊடுபயிராகச் செய்யலாம். நேராக, உயரமாக வளரக்கூடிய மரம் என்பதால், ஓரளவுக்கு வளர்ந்த மரத்தின் தூர் பகுதியில் இரண்டு மிளகுக் கொடிகளை நடலாம். மிளகு மூலமும் தனி வருமானம் கிடைக்கும்! 

60 அடி உயரத்துக்கு மேல் வளரக்கூடிய மரம் இது. மாதம் சராசரியாக ஒரு செ.மீ. முதல் 2 செ.மீ. சுற்றளவுக்கு வளரும். சுமார் 20 அடி உயரம் வரை பக்கக் கிளைகள் வராது என்பதால், இலை, கிளைகளை வெட்டிவிட தேவையில்லை. தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளும் (self pruning) தன்மை வாய்ந்ததும்கூட!  


ஆண்டுக்கு ஒரு லட்சம்!

ஓராண்டு காலம் வளர்ந்த மலைவேம்புத் தோட்டம், இயற்கையாக அமைந்த பசுமைக்குடிலை போன்று ரம்மியமாகக் காட்சியளிக்கும். 7-ம் ஆண்டு முடிவில் அறுவடை செய்யலாம். ஒரு மரத்தில் இருந்து சுமார் 15 கன அடி தடிமரம் கிடைக்கும். தற்பொழுது கன அடி 250 ரூபாய்க்கு விலை போகிறது. ஒரு மரம் 3,750 ரூபாய்க்கு விலை போகும். சராசரியாக 3,500 ரூபாய் எனக் கணக்கிட்டாலே, 200 மரங்களுக்கு 7 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு ஏக்கரில் இருந்து ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் வருமானம் கிடைக்கும் என்று வைத்துக் கொள்ளலாம். 

இது தற்போதைய நிலவரம். 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இதன் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த மரம் பிளைவுட் செய்வதற்கு பெரிதும் பயன்படுகிறது. பூச்சி அரிக்காது என்பதால் கட்டடங்களின் உள் அலங்கார வேலைகளுக்கும் உபயோகப் படுத்தப்படுகிறது. மரத்தின் சுற்றளவு அதிகரிக்க அதிகரிக்க பலகை, ஜன்னல் கட்டைகள், நிலைக்கட்டைகள் செய்வதற்கும், மேசை, நாற்காலி, கட்டில்கள் செய்யவும் பயன்படும். வணிகரீதியில் மிகப்பெரிய பயனைத் தரக்கூடிய மலைவேம்பை நடவு செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும். தரமான மலைவேம்பு நாற்றுகள் குறைந்த விலையில் அனைத்து வனவியல் விரிவாக்க மையங்களிலும் கிடைக்கின்றன.


75 லட்ச எதிர்பார்ப்பு! 

மலைவேம்பை தனிப்பயிராக 5 ஏக்கரில் சாகுபடி செய்து வருகிறார் திண்டுக்கல் மாவட்டம் கோனூர், வெங்கடேசன். அவரிடம் பேசியபோது, ''நான் எம்.சி.ஏ. படிச்சிருக்கேன். படிச்சவங்கள்லாம் விவசாயத்துல பெருசா லாபம் இல்லனு, அதை விட்டுட்டு வேற வேலைக்குப் போறாங்க. ஆனா, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முறையா செஞ்சா, விவசாயத்துலயும் நல்ல வருமானம் பாக்க முடியும். 

ஏக்கருக்கு 400 செடிகள் (10 அடிக்கு ஜ் 10 அடி) வீதம் 2009-ம் வருஷம் நவம்பர் மாசம் 5 ஏக்கர்ல 2,000 செடிகளை நடவு செஞ்சேன். ஒண்ணேகால் வருஷத்துல ஒவ்வொரு மரமும் 35 செ.மீ. சுற்றளவுல, 20 அடி உயரத்துல வளர்ந்து தோப்பா நிக்குது. இப்போதைக்கு கன அடி 250 ரூபாய்னு சொல்றாங்க. நான் இன்னும் 5 வருஷம் கழிச்சுதான் வெட்டணும். இன்னிக்கு விலைக்கு கணக்குப் போட்டாலே... குறைஞ்சபட்சம் ஒரு மரம் 3,750 ரூபாய் வீதம், 2,000 மரத்துல இருந்து 75 லட்ச ரூபா கிடைச்சுடும்'' என்று மகிழ்ச்சியோடு சொன்னவர், ''ஊடுபயிரா சோதனை அடிப்படையில வாழையை நட்டுப் பார்த்தேன். நல்லாவே வளர்ந்து வந்துச்சி. அதனால 5 ஏக்கர்லயும் ஊடுபயிரா இலைவாழையை நடவு செய்ய முடிவு செஞ்சிருக்கேன்'' என்று சொன்னார். 

தொடர்புக்கு, வெங்கடேசன், அலைபேசி: 92458-47805 இந்தியாவே தாயகம்! மலைவேம்பு, மீலியேசி எனப்படும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். காட்டு வேம்பு, மலபார் வேம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இம்மரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. 

நன்றி: http://kulasaivaralaru.blogspot.in/2012/05/26-grow-tree.html
     

Thursday 15 November 2012

குறுகிய காலத்தில் நிறைவான வருமானம் மலைவேம்பு

குறுகிய காலத்தில் நிறைவான வருமானம் மலைவேம்பு

மலைவேம்பு... மானாவாரியிலும் மகசூல்
கன்றுகளை வாங்க வேண்டாம், நீங்களே உற்பத்தி செய்யலாம்...

 
குறுகிய காலத்தில் அறுவடைக்கு வந்தாலும், நிறைவான வருமானம் தரக்கூடிய மரங்களில் முதலிடத்தில் இருப்பது, மலைவேம்பு. பிளைவுட், தீக்குச்சி, காகிதம்... என பல பொருட்களுக்கு மூலப்பொருளாக மலைவேம்பு இருப்பதால், நாளுக்கு நாள் இதன் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதை உணர்ந்த பலரும் தற்போது மலைவேம்புக் கன்றுகளை நடவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேசமயம், தரமற்ற நாற்றுக்கள், போதிய தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் மலைவேம்பு சாகுபடியில் சில பிரச்னைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
இந்நிலையில், இத்தகையப் பிரச்னைகளை சரி செய்யும் நோக்கிலும்... வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய வகையிலும், 'ஒட்டு ரக மலைவேம்பு’க் கன்றுகளை உருவாக்கியிருக்கிறார், தமிழக வனத்துறையின் முன்னாள் கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் குமாரவேலு!
(பசுமை விகடன் 10.2.2008 தேதியிட்ட இதழில் 'மலைக்க வைக்கும் மலைவேம்பு!’ என்ற கட்டுரை மூலம் குமாரவேலு, மலைவேம்பு சாகுபடி பற்றி நிறைய தகவல் சொல்லியிருந்தார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் மலைவேம்பு சாகுபடி வேகமெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது)
மாதம் ஒரு லட்சம் டன்!
கடலூர் மாவட்டம், வேகாக்கொல்லை கிராமத்திலிருக்கும் நாற்றுப்பண்ணைக்கு, வந்திருந்த குமாரவேலுவைச் சந்தித்தபோது... ''மூங்கில், சவுக்கு, தேக்கு... என்று ஏகப்பட்ட மரங்கள் இருந்தாலும், மலைவேம்பு மரம் சீக்கிரமாகவே வளர்ந்துவிடுவது விவசாயிகளுக்கு விரைவான பலன் தருவதாக இருக்கிறது. தீக்குச்சித் தொழிற்சாலைகளுக்கு ஒரு மாதத்துக்குக் கிட்டத்தட்ட ஒரு லட்சம் டன் அளவுக்கு மலைவேம்பு மரம் தேவைப்படுகிறது. காகித ஆலைகளுக்கு ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 5 லட்சம் டன் அளவு மரம் தேவைப்படுகிறது என்பதால், விற்பனையில் எந்தப் பிரச்னையும் இல்லை.
விதைக்கன்றுகளில் தரமில்லை!
ஆனால், நல்ல வளர்ச்சியுள்ள தரமான கன்றுகள், குறைந்த விலையில் கிடைப்பதில்லை. நன்றாக வளர்ந்த பெரிய மரங்களில் இருந்துதான் விதைகளைத் தேர்வு செய்து கன்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும். பெரும்பாலான பண்ணைகளில் நல்ல விதைகளைத் தேர்வு செய்யாமல், தரமில்லாத கன்றுகள்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால், மரங்களின் வளர்ச்சி சீராக இருப்பதில்லை.
கைகொடுக்கும் குளோனிங் கன்றுகள்!
2008-ம் ஆண்டு நான் பணி ஓய்வு பெற்ற பிறகு, தமிழ்நாடு புகளூர் காதித ஆலை நிறுவனத்தில் ஆலோசகராக வேலை பார்த்தேன். அப்போது, தரமான, நன்றாக வளர்ச்சியடைந்த மரங்களைத் தேர்வு செய்து, தரமான வித்துகள் மூலம் 'திசு வளர்ப்பு’ முறையிலும், குளோனிங் (விதை இல்லா இனப்பெருக்க முறை) முறையிலும் கன்றுகளை உற்பத்தி செய்து, ஆய்வுகளை மேற்கொண்டோம்.
அவை சிறப்பாக வளர்ந்து வந்தன. அதனால், அந்த ஆலையில் தற்போது ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் அளவில் 'குளோனிங்’ கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, மிகமிகக் குறைவாக 6 ரூபாய் விலையில் விநியோகிக்கப்படுகின்றன.
மலைவேம்புக் கன்றுகள் குறித்தத் தகவல்கள் தேவைப்படுவோர், புகளூர் காகித ஆலை நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர். சின்னராஜ் மற்றும் முனைவர்.செழியன் ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்'' என்ற வழிகாட்டுதல் தந்த குமாரவேலு, தொடர்ந்தார்.
வறட்சிப் பகுதிகளுக்கு ஒட்டுக்கன்றுகள்!
''தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் சூழ்நிலையில், மரங்கள் வளர்க்க போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. மலைவேம்புக்கும் இந்தப் பிரச்னை உண்டு. அதனால், தண்ணீர் குறைவாக உள்ள இடங்களில் மலைவேம்பை எப்படி வளர்ப்பது என்று யோசனை செய்த போதுதான், வேப்ப மரத்துடன் ஒட்டுக்கட்டும் யோசனை தோன்றியது. வேப்ப மரத்தில் இருக்கும் ஆணிவேர் 10 மீட்டர் ஆழம் வரை செல்லும் தன்மையுடையது. அதனால், பூமிக்கடியில் உள்ள தண்ணீரை எளிதில் உறிஞ்சி எடுத்துக் கொள்ளும். மேலும், களர் மற்றும் உவர் மண் பூமியிலும் சிறப்பாக வளரும். வேப்ப மரமும், மலைவேம்பு மரமும் 'மீலியேசியே’ (விமீறீவீணீநீமீணீமீ) என்ற குடும்பத்தைச் சேர்ந்தத் தாவரங்கள். அதனால்தான், 'இரண்டையும் ஒட்டுக் கட்டினால் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய கன்றுகள் கிடைக்கும்’ என முடிவு செய்தேன்.
ஆரம்பத்தில், திருச்சி மாவட்டம், முக்கொம்பு வன மையத்தில் 50 ஒட்டுக்கன்றுகளை உருவாக்கி, அவற்றை அரிமளம். வன ஆராய்ச்சி நிலையத்தில் நட்டுப் பராமரித்தோம்.
6 மாதங்களிலேயே அதிகமான வளர்ச்சி இருந்தது. ஆகையால், இந்த ஒட்டுக்கட்டும் தொழில்நுட்பத்தை எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்து வருகிறேன்'' என்றவர், வேகாக்கொல்லை நாற்றுப்பண்ணை பற்றிய செய்திக்கு வந்தார்.
ஒரு நாற்று ஏழு ரூபாய்!
''நெய்வேலி அருகிலிருக்கும் இந்த வேகாக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், குளோனிங் முறையில் மலைவேம்பு கன்றுகளை உருவாக்கி, விற்பனை செய்துவருகிறார். தற்போது, தனியார் நாற்றுப் பண்ணைகளில் ஒரு மலைவேம்பு கன்றை 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்கிறார்கள்.
ஆனால், இவர், குளோனிங் முறையில் உற்பத்தி செய்யும் கன்றுகளை 7 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார். இவருக்கு ஒட்டுரகக் கன்றுகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தை நான் கற்றுத் தந்திருக்கிறேன். இதன் மூலம் உருவான கன்றுகளை விரைவில் விற்பனை செய்ய இருக்கிறார்'' என்ற குமாரவேலு, அடுத்து... ஒட்டுரகக் கன்று உருவாக்கும் தொழில்நுட்பத்தை விவரித்தார்.
இப்படித்தான் ஒட்டு கட்டணும்!
''ஒரே வயதுடைய வளமான நாட்டு வேம்பு மற்றும் மலைவேம்புக் கன்றுகளைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். பிறகு, நாட்டு வேம்பின் மேல்பகுதியை வெட்டி நீக்கிவிட்டு, அடிப்பகுதியையும், மலைவேம்புச் செடியின் அடிப்பகுதியை வெட்டி நீக்கிவிட்டு, மேல் பகுதியையும் எடுத்துக் கொள்ள வேண்டும். வெட்டி வைத்திருக்கும் மலைவேம்பு கன்றின் தண்டு பாகத்தின் முனைப் பகுதியில், ஒரு பக்கத்தை மட்டும் சீவிக் கொள்ள வேண்டும்.
பிறகு, நாட்டுவேம்பின் தண்டை கொஞ்சம் போல இரண்டாகப் பிளந்து, அதன் மையத்தில் மலைவேம்பு தண்டின் சீவிய பாகத்தை வைத்து, பிளாஸ்டிக் பேப்பர் கொண்டு காற்று புகாத அளவுக்கு இறுக்கிக் கட்ட வேண்டும். பிறகு, நிழல் வலையில் 20 நாட்கள் வைத்திருந்தால் துளிர் வரும். பிறகு, கன்றுகளை வேறு இடத்தில் மாற்றி நடவு செய்யலாம். இது மிகமிக எளிதான தொழில்நுட்பம்தான். யார் வேண்டுமானாலும், இந்த முறையில் ஒட்டுக் கன்றுகளை உருவாக்கிவிட முடியும்'' என்று நம்பிக்கைஊட்டினார்!
தொடர்புக்கு,

முனைவர். குமாரவேலு,
செல்போன்: 96000 -73059,
முனைவர். செழியன்
(புகளூர் காகித ஆலை)
செல்போன்: 94425-91412.

இடைவெளி கணக்கில்லை!
மலைவேம்புக் கன்றுகளை, 10 அடி, 9 அடி, 5 அடி... என நமது இடவசதியைப் பொறுத்து, தேவைக்கு ஏற்ற அளவில் இடைவெளி கொடுத்து, நடவு செய்து கொள்ளலாம். 10 அடி இடைவெளியில் நடவு செய்தால், ஏக்கருக்கு சராசரியாக 350 முதல் 400 கன்றுகள் தேவைப்படும். 9 அடி இடைவெளி என்றால், 540 கன்றுகளும், ஐந்தடி இடைவெளி என்றால், 1,000 முதல் 1,200 கன்றுகளும் தேவைப்படும். வரப்பு ஓரங்களில் 3 மீட்டர் இடைவெளியிலும் நடவு செய்யலாம். இதற்கு ஏக்கருக்கு 80 முதல் 100 கன்றுகள் தேவைப்படும்.
மூன்று அடி சதுரம், மூன்றடி ஆழத்தில் குழி எடுத்து... மண்புழு உரம்-2 கிலோ, வேம் (வேர் வளர்ச்சி உட்பூசணம்)-50 கிராம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, சூடோமோனாஸ் ஆகியவற்றில் தலா 20 கிராம் இவற்றை மண்ணோடு கலந்து இரண்டு அடி ஆழத்துக்குக் குழியை நிரப்பி, மையத்தில் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். ஒட்டுப்பகுதி, குழியின் உள்ளே, இருப்பது போன்று பார்த்துக் கொள்ள வேண்டும். அதேசமயம், முழுவதுமாக மண்ணைப் போட்டு மூடி விடக்கூடாது. அதாவது, ஒட்டுப்பகுதியானது மண்ணால் மூடப்படாமல் இருக்க வேண்டும். கன்று வளரத் தொடங்கியபின் கொஞ்சம் கொஞ்சமாக மூடி வரவேண்டும். ஒரு வருடத்தில் முழுவதும் மூடிவிடலாம். ஒட்டுக்கன்றுகளுக்கு சொட்டுநீர் மூலம் குறைந்த அளவு தண்ணீர் கொடுத்து வந்தால், போதுமானது. தண்ணீர் வசதி அதிகமாக இருந்தால், 'குளோனிங்’ கன்றுகளை நடவு செய்யலாம். தேவையைப் பொறுத்து உரமிட்டுப் பராமரிக்க வேண்டும்.
ஒன்பது ஆண்டுகளில் 20 லட்சம்!
9 அடிக்கு, 9 அடி இடைவெளியில் நடவு செய்த மரங்கள், மூன்று வருடங்களில் 45 சென்டி மீட்டர் சுற்றளவுக்கு வரும். அப்போது, ஒரு மரம் விட்டு ஒரு மரம் என்று வெட்டி எடுக்க வேண்டும். ஏக்கருக்கு ஏறத்தாழ, 35 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும். ஒரு டன், 5 ஆயிரம் ரூபாய் என விற்க முடியும்.
மீதி மரங்கள், அடுத்த மூன்றாண்டுகளில் (நடவு செய்து ஆறு ஆண்டுகள்) 100 சென்டி மீட்டர் சுற்றளவுக்கு வந்து விடும். இவற்றிலும் ஒரு மரம் விட்டு ஒரு மரம் என்று வெட்டினால்... 90 மரங்கள் வரை கிடைக்கும். ஒரு மரத்தை 6 ஆயிரம் ரூபாய் என விற்க முடியும்.
இப்போது வெட்டியது போக 90 மரங்கள் வரை நிலத்தில் மிச்சமிருக்கும். இவை அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளில் (நடவு செய்து பத்து ஆண்டுகள்) 150 சென்டி மீட்டர் முதல் 200 சென்டி மீட்டர் வரை சுற்றளவுக்கு வந்து விடும். அந்த சமயத்தில் ஒரு மரத்தை 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும். இந்தக் கணக்கில் பார்த்தால்... 10 வருடங்களில் ஒரு ஏக்கரில் இருந்து சராசரியாக 20 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.
thanks vikatan + duraisamy erode + nermai-endrum.blogspot.com

தவிர்க்கப்படவேண்டிய நோய்த்தன்மை உடைய 10 உணவுகள்

ஆரோக்கிய வாழ்க்கை என்பது நீங்கள் தேர்வு செய்வது .நமது ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவை சார்ந்திருக்கிறது . நம் சொந்த ஆரோக்கியமானது ஆழ்ந்த தாக்கம் உடையது . உணவு ,உயிர்ச்சத்து இவற்றின் அடிப்படடைக் கொள்கைகளை  புரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் ஆரோக்கிய வாழ்வின் உச்ச சக்தியை பெறமுடியும் . ஒவ்வொரு நாளும் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய நம் உணவு பழக்கத்திலுள்ள நோய்த்தன்மை உள்ள உணவுகளை சிறிது கவனத்திற்கு கொண்டுவருவோம் .


  முதல் நோய்தன்மையுடைய உணவு : பால் 


                                                         பூமியில் பால் அருந்துவதிலிருந்து பிரிக்க முடியாத ஒரு உயிர் ஜீவி இருக்கிறது என்றால் அது மனிதன்தான் .எந்த ஒரு உயிரினமும் தனது இனத்து பாலை தவிர மற்ற இனத்தின் பாலை குடிப்பதில்லை. பசுவின் பாலின் இரசாயன அமைப்பு மனித இன பாலின உள்ளமைப்பிலிருந்து வேறுபட்டது . அது இலகுவாக ஜீரணம் ஆகாத ஒன்று. நமது உடலின் மீது மிகப்பெரிய சுமையை ஏற்றுகிற உணவு. ஆராய்ச்சி முடிவுகளின்படி , பால்  பலவித நோய்களுக்கு உதாரணமாக தைராய்டு பிரச்சினைகள் ,இதயநோய்கள், புற்றுநோய்,மூட்டுவலி, கை, கால் நடுக்கம் ,ஒற்றை தலைவலி , தலைவலி பிரச்சினை ,எதிர்வினைகள் , காது சம்பந்தமான தொற்றுநோய்கள் , காச நோய்கள் மேலும் உடல் சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கு காரணமாக செயல்படுகிறது .பசும்பாலில் உள்ள கால்சியம் மிகவும் தரம் குறைந்தது. மனித உடல் ஏற்றுகொள்ள முடியாத நிலையில் உள்ளது . நாம் இரத்த சோகையினால் பாதிக்கப்படக்கூடும். ஏனெனில் பால் உணவுகளில் இரும்புச்சத்து குறைவாக உள்ளது .மிருகப்பால் மனித ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல .

இரண்டாவது ஆரோக்கியமற்ற உணவு : சர்க்கரை

                                                                                       சர்க்கரை உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை கட்டுப்படுத்துகிறது . மேலும் உடலின் தாது சமன்பாட்டை  நிலைகுலைய செய்கிறது. நீரிழிவு நோய்க்கு காரணமாகிறது .மேலும் உடலில் உருவாகும் உட்சுரப்பு திரவத்தின் சமநிலைக்கேடுக்கு காரணமாகிறது .சர்க்கரை டால்டா , ஆல்பா , பீட்டா , என்ற மூளை அலைகளின் வளர்ச்சிக்கு காரணமாகிறது . அதிக எண்ணிக்கையையும் உருவாக்குகிறது. இதன்மூலம் தெளிவாக சிந்திக்ககூடிய மனித மூளையின் திறமையை குறைக்கிறது.

மூன்றாவது ஆரோக்கியமற்ற உணவு :கடல் உப்பு 

 

 
                                                            அதிக உப்பு அதிக இரத்த அழுத்தத்தையும்  நரம்பியல் பிரச்சினைகளையும் உருவாக்குகிறது. அதிக உப்பு கலந்த உணவு, எலும்பு அடர்த்தியை குறைக்கிறது. உப்பு அதிகமாவது  இடது வேன்ரிகுலர்  ஹைபர்டிரபி( Left ventricular hypertrophy ) இதயம் அளவில் பெரியதாவது , இதய நோய் வருவதற்க்கான பிரச்சினைகளுக்கு காரணமாகிறது . மூளைத்திசுவிற்கு உப்பு உகந்ததல்ல . இதன் மூலம் சிறிய தாக்குதல்களுக்கு காரணியாகிறது. 

நான்காவது ஆரோக்கியமற்ற உணவு : பாலிஸ் செய்யப்பட்ட அரிசி

 

மேன்மைபடுத்தப்பட்ட வெள்ளை அரிசியை உட்கொள்ளுவதால் வயிற்று குடல் பிரச்சினைகளும்  இதய நோய்களும் வரும் சூழ்நிலை உருவாகிறது. ஏனென்றால் நார்ச்சத்து மற்றும் மிக அத்தியாவசியமான எண்ணைகளை கொண்டிருக்கும் தவிடு ( நோய்களை தடுக்கும் பணியை செய்யும் ) அரிசியை மேன்மைபடுத்தும்போது  அது முற்றிலும் நீக்கபடுகிறது.  மேன்மைபடுத்திய அல்லது வெள்ளை அரிசி கோலோஸ்டிராலுக்கு காரணமாகிறது. ஏனென்றால் உடலுக்கு உதவும் எல்லா நல்ல எண்ணெய்களும் இந்த அரிசியிலிருந்து நீக்கபடுகிறது . இதை தவிர்த்து  உங்கள் உடலில் உள்ள உயிர்ச்சத்துக்கள் வெள்ளை அரிசி தன்வயபடுத்துகிறது .அதிகபடியான கார்போஹைட்ரேட்  உணவு உட்கொள்ளுவதால் சர்க்கரையின் சமன்பாடு சீர்குலைகிறது . இது நீரிழிவு நோய்க்கு வழி வகுக்கிறது. மேலும் இது உடலிலுள்ள சர்க்கரையை ஒழுங்குபடுத்தும் உள்ளமைப்பின்மீது அதிக அழுத்தத்தை செலுத்தி சீர்குலைக்கிறது 

ஐந்தாவது ஆரோக்கியமற்ற உணவு : வெள்ளை மாவு

வெள்ளை மாவு கணையத்தின் பீட்டா செல்களை அழித்துவிடும் . நீரிழிவு நோய்களை உருவாக்கும் ரசாயன பொருளான அல்லோக்சனை கொண்டிருக்கிறது. ஒருவர் மேன்மைபடுத்தபட்ட உணவை அதிகமாக உட்கொண்டால் அதை சமாளிக்க அதிகமான அளவில் இன்சுலின் சுரக்க வேண்டும் . வெள்ளை மாவில் உள்ள செயற்கையான B -வைட்டமின்கள் நிலக்கரி தாரிலிருந்து (Coalter ) உருவாக்கபடுகிறது. இது உடலின் உள்ளமைப்பில் குழப்பங்களை ஏற்படுத்துகிறது . கடைகளில் விற்கப்படும் வெள்ளை மாவு அதிக நாள் கடை அலமாரிகளில் வைப்பதற்காக கலக்கப்பட்ட ரசாயன பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது . பொட்டாசியம் bromat  போன்ற இந்த வேதியல் கலவை புற்று நோயை உருவாக்கும் தன்மை உடையவை . வெள்ளை மாவில் உள்ள குளுடன் (Gluten ) என்ற பொருள், குளுடன்  ஏற்று  கொள்ளாதவர்களுக்கு குடல் நோயை ஏற்படுத்துகிறது. மேலும் இது எரிச்சல் ஊட்டக்கூடிய bowel  syndromes , crohns disease , dermatitis herpetifornus (autism ) cerate colitis   என்ற பலநோய்களை உருவாக்குகிறது .

ஆறாவது ஆரோக்கியமற்ற உணவு : சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்


                                               Hydrogenation  என்ற முறையின்  மூலம் பல முக்கியமான உயிர்ச்சத்துக்கள் நீக்கப்படுகின்றன .இது மொத்த கொலஸ்ட்ரால் வரம்புகளை அதிகமாக்குகிறது . HDL கொலஸ்ட்ராலை  குறைக்கிறது . LDL கொலஸ்ட்ராலை உயர்த்துகிறது.இந்த எண்ணெய்களை உட்கொள்ளுவதால் Breast ,Pastorate and coloncancers இந்த வகையான புற்று நோய்கள் நம்மை தாக்கும் அபாயம் அதிகமாகிறது.Toxins and carcinogens என்ற கேடுகளை தவிர்க்ககூடிய உடலின் உள்ளார்ந்த சக்தியை இது குறைக்கிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இது உடலில் சுரக்கும் சில திரவங்களிடம் குறுக்கிடுகிறது.


ஏழாவது ஆரோக்கியமற்ற உணவு: குளிர்பானங்கள்


வாயு கலந்த குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் கார்பன் -டை -ஆக்சைடு மிகவும் ஆபத்தானது . இதன் காரணமாக குளிர்பானங்கள் அசிடிக் ஆகின்றன . இது நமது உடலில் உள்ள நமக்கு பயன் தரக்கூடிய நுண்ணுயிர்களை பெரும்பான்மையான உயிரிகளை கொன்றுவிடும் அளவுக்கு அசிடிக் குணம் உடையதாகிறது. குளிர்பானங்களை குடிப்பது ஜீரண வழிமுறைகளை தாமதமாக்குகிறது . குளிர்பானங்களில் அதிகமான சர்க்கரை அளவு மிக அதிகமான கலோரி உள்வாங்குவதால்  பற்சிதைவு ,அதிகமான உடல் எடை என்ற சங்கடங்களையும் கஷ்டங்களையும் ஏற்படுத்துகிறது. இரத்தத்தில் கலந்துள்ள பாஸ்பரஸ் மூலத்தன்மையை நீக்குவதற்கு (இது குளிர்பானத்தில் கலக்கபடுகிறது) எலும்புகளில் இருந்து கால்சியத்தை அப்போபடுத்தி பின்னர் இரத்த ஓட்டத்துடன் கலக்க செய்து osteoporosis என்ற ஒரு நோயை உருவாக்குகிறது. குளிர்பானங்களில் உள்ள carbolic Acid எலும்புகளை சிதைப்பதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.


எட்டாவது ஆரோக்கியமற்ற உணவு காபி மற்றும் தேனீர்



இது பலருக்கும் தவிர்க்கமுடியாத பழக்கம் . மிக ஆபத்தான பொருட்களின்  கூட்டு சிக்கலான கூட்டுசேர்க்கையான நியாசின் ,cafin ,டிரைகொநெல்லின் ,டேனிக்  அமிலம் என்ற பல பொருட்களின் மொத்த வடிவம் .kafin  நமது உடலில் உள்ள மொத்த நரம்பு  தூண்டிவிட்டு சுறுசுறுப்பாக்குகிறது .அதிக சக்தி என்ற ஒரு கற்பனை தோற்றத்தை உருவாக்குகிறது. இதன் அடுத்தகட்டமாக நமது பசியுணர்வை கட்டுப்படுத்துகிறது .

உண்மையில் ,உடல் 24 மனித்துளிகளுக்கும் மேலாக ஒரு கப் காபியின் விளைவுகளைப் போக்குவதற்கு எடுத்துக்கொள்கிறது. காபியின் நீண்ட நாள் விளைவுகள் என்னவென்றால் அடிக்கடி தலைவலி ,ஆங்காங்கே சிவப்பான தோல் திரட்டு ,இதயத்தின் வேகத்துடிப்பு , மலச்சிக்கல் , அதிக தளர்ச்சி , மனநிலையில் ஏற்ற தாழ்வுகள் , மனதை ஒருமுகபடுத்த முடியாமை போன்ற பல விளைவுகளே .

இந்த பானங்கள் உடலின் ஈரப்பசையை நீர்த்தன்மையை நீக்குகின்றது . மேலும் நமது தூக்கத்தை கட்டுபடுத்துகிறது .

ஒன்பதாவது ஆரோக்கியமற்ற உணவு: ஐஸ் கிரீம் 




 செயற்கையான மணங்களும் ,சுவைகளும் மிகவும் பலம் வாய்ந்த சீர்கேடு உணவுகள் .இதன்மூலம் கல்லீரல் , சிறுநீரகம் ,மேலும் இதயம் இவற்றில் நோய்கள் உருவாக வாய்ப்புண்டு . இதில் பயன்படுத்தப்படும் பெப்ரோணல் என்ற மணமூட்டும் ஒரு பொருள் பேன்களை கொல்ல  பயன்படும் ஒரு வேதியல் சாதனம் . அன்னாசிப்பழ ஐஸ் கிரீமில் உபயோகிக்கப்படும் எதில் அசிட்டேட் (Ethyl acetate ) தோல் சம்பந்தமான தொழிலிலும் ,துணி ஆலைத் தொழிலிலும் பயன்படுத்தப்படும் ஒரு வேதியல் பொருள் .இது அந்த தொழில்களில் சுத்திகரிப்புக்கு பயன்படுகிறது . அதிலிருந்து வரும் ஆவிக்காற்று ,தீவிரமான நுரையீரல் , கல்லீரல் இதய பாதிப்புகளை உருவாக்கும் . வாழைப்பழ மணத்திற்காக பயன்படும் amyl butyrate  ஆயில் பெயின்ட் சால்வன்ட்டாக (oil paint solvent ) உபயோகப்படுகிறது. aldehydec 17 செர்ரி flavour ஐஸ் கிரீமில் உபயோக்கிக்கபடுகிறது .இது எளிதில் எரியக்கூடிய ஒரு திரவம் .Plastic மற்றும் ருபபேர் தயாரிப்பு தொழிலில் aniline dyes ஆகப்பயன்படுகிறது 

பத்தாவது ஆரோக்கியமற்ற உணவு : மாமிச உணவு 


புரதச்சத்து அதிக அளவில் இருப்பதால் அசைவ உணவு சிறுநீரகங்களை அதிக வேளையில் ஆழ்த்துகிறது .இதனால் உடல் உறுப்புகளில் இயக்கத்திரன் குறைகிறது. இது ஆரோக்கியத்தை உருக்குலைக்கும் கோளாறுகளை நம் உடலில் ஏற்ப்படுத்தும் .அசைவ உணவுகள் அதில் உள்ள கொழுப்பு சக்தியால் கலோரிகளை அதிகப்படுத்துகின்றன .இது உடல் பருமன் ,நீரிழிவு ,உயர் ரத்த அழுத்தம் போன்ற ஆரோக்கிய கேடுகலுக்கு வழிவகுக்கிறது . ஏல்லா மிருகங்களின் திசுக்களும் நச்சுத்தன்மை கொண்ட கழிவுகளை தன்னகத்தே கொண்டுள்ளன .மாமிச உணவை உட்கொள்ளும்போது ,உடல் அமைப்பில் உள்ள விஷத்தன்மையின் எல்லைகள் வரம்பு மீறுகின்றன .அசைவ உணவில் நார்த்தன்மை (Fiber content ) குறைவாக உள்ளதால் குடல் பகுதியில்  உணவின்
இயக்கம் குறைந்து colon புற்று நோய்க்கு காரணமாகிறது .அதாவது குடல் வாயிலிருந்து    மலக்குடல் வரை உள்ள பெருங்குடலின் பகுதியில் புற்று நோயின் பாதிப்பு  வரக்கூடும் . அசைவ  உணவின் விளைவான அதிக அளவு யூரிக் அமிலம் (Uric Acid ) பல நோய்களை  வாதரோகம் ,பிளைட் நோய் (blights disease ) சிறுநீரகக் கற்கள் , கீழ்  வாதம்( முழங்காலில் வீக்கம் ) பித்தப்பை கற்கள் போன்ற பல உடல் நலக் கேடுகளை உருவாக்கும்