Wednesday 26 April 2017

ஒரே மருந்து பல நோய்களுக்கு

ஒரே மருந்து பல நோய்களுக்கு

ஒரே மருந்து பல நோய்களை குணப்படுத்தும் என்று கேட்டவுடன் மிகவும் ஆச்சரியமாக உள்ளதா ......
ஆம் ...உண்மைதான் ....
ஆனால் நம்முடைய பழமொழி "வரும் முன் காப்பதே மேல்" என்பதற்கு ஏற்ப முன்னாடியே எடுத்துக்கொண்டால் மிகவும் நல்லது.
எவ்வாறு தயாரிப்பது?
வெந்தயம் - 250 கிராம் 
ஓமம் - 100 கிராம் 
கருஞ்சீரகம் - 50 கிராம் 
மேலே உள்ள பொருட்களை சுத்தம் செய்து தனித்தனியாக வாணலியில் வைத்து இளஞ்சூட்டில் வறுத்து பின்பு ஆற வைத்து அப்புறம் பொடி பண்ணிக்கொள்ள வேண்டும். பொடி பண்ணிய பிறகு மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை காற்று புகாத கண்ணாடி குடுவையில் வைத்து கொள்ளவும். இதுவே ஆகச் சிறந்த மருந்து.
எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்?
இரவு நேரத்தில் ஒரு தேக்கரண்டி அளவு வெது வெதுப்பான தண்ணீரில் (ஒரு டம்ளர் அளவு) போட்டு குடிக்க வேண்டும். இதை அருந்திய பிறகு எதுவும் சாப்பிடக்கூடாது.
சாப்பிடுவதினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
இதை தொடர்ந்து சாப்பிடுவதால் நம் உடலிலுள்ள நச்சுக்கள் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப் படுகிறது. 
  1. தேவையற்ற கொழுப்பு நம் உடம்பிலிருந்து வெளியேற்றப் படுகிறது.
  2. இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டம் ஏற்படுகிறது.
  3. இரத்த குழாய்களில் உள்ள அடைப்பு நீக்கப்படுகிறது மற்றும் இதயம் சீராக இயங்குகிறது.
  4. தோல் சுருக்கம் குறைந்து சருமம் மினுமினுப்படைகிறது.
  5. எலும்புகள் உறுதியடைந்து தேய்மானம் நீங்குகிறது.
  6. ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பல் உறுதி தன்மை அடைகிறது.
  7. கண்பார்வை தெளிவாகிறது.
  8. முடி நன்றாக வளர்ந்து கூந்தல் அழகு பெறுகிறது.
  9. நினைவாற்றல் கூடுகிறது.
  10. மலச்சிக்கல் நீங்குகிறது; மலச்சிக்கலே பல நோய்களுக்கு காரணி.
  11. கேட்கும் திறனை கூட்டுகிறது.
  12. மாதவிடாய் சம்பந்தமான நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.
  13. பாலியல் சம்பந்தமான பிரச்சனைகள் நீக்கப்படுகிறது.
  14. நீரழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
  15. இரண்டு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட நோய்கள் அனைத்தும் குணமாகிறது.
  16. செரிமாணம் சம்பந்தமான நோய்களும் குணப்படுத்தப் படுகிறது.
Thanks: https://thirikadugam.blogspot.in

Thursday 24 November 2016

பூண்டு -ஆரோக்கியப் பெட்டகம்

பூண்டு -ஆரோக்கியப் பெட்டகம்



வறுத்த 6 பூண்டு சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?
பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும்.
இங்கு அந்த அற்புதங்கள் என்ன வென்று கொடுக்கப்பட்டுள்ளது .
மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும்.
அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால்…
உயர் இரத்த அழுத்தம்,
குறைந்த இரத்த அழுத்தம்,
உயர் கொலஸ்ட்ரால்,
இதய நோய்கள்,
மாரடைப்பு,
பெருந்தமனி தடிப்பு
போன்றவைகளை கட்டுப்படுத்தலாம்.
மேலும் பூண்டுகள் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தைத் தடுக்கும்..
மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும்.
பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும்.
இத்தகைய பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும்.
இங்கு அந்த அற்புதங்கள் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது. 
1 மணிநேரம்:
வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும்.
2-4 மணிநேரம்:
2-4 மணிநேரத்தில் பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.
4-6 மணிநேரம்:
4-6 மணிநேரத்தில் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.
6-7 மணிநேரம்:
பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும்.
7-10 மணிநேரம்:
இக்காலத்தில், பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.
10-24 மணிநேரம்:
முதல் 1 மணிநேரத்தில் பூண்டு செரிமானமாகியப் பின், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிடுவதுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களையும் செய்ய ஆரம்பிக்கும்.
அவை......
1. கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்படும்.
2. தமனிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
3. இரத்த அழுத்தத்தை சீராக்கும்.
4. உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
5. உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கும்.
6. எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.
7. அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கும்.
8. உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கும்

Monday 7 November 2016

புழுவெட்டை குணப்படுத்தும் மருத்துவம்

புழுவெட்டு என்னும் உபாதைக்கு கீழ்காணும் சில எளிய வழிகளால் குணம் காணலாம். 

1. கடுக்காயை அரைத்து இரவில் புழுவெட்டு ஏற்பட்டுள்ள பகுதிகளில் பூசி, மறுநாள் காலையில் கழுவிவிடலாம்.கடுக்காயுடன் மஞ்சளையும் அருகம்புல் சாறுடன் அரைத்து, இரவில் பூசி, மறுநாள் காலையில் கழுவலாம். மருதாணி இலையை அரைத்துப் பூசலாம்.


2. நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

3. அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

4. புழுவெட்டிற்கு மருந்தாக கைவைத்தியமாக குணபாடம் மூலிகை நூலில் கூறியபடி, சிறிய வெங்காயம் - இரண்டு, மிளகு - இரண்டு, கல்லுப்பு - ஒரு சிட்டிகை மூன்றையும் அம்மியில் அரைத்து புழுவெட்டு பாதித்த இடத்தில் தடவி வர, இரண்டுநாட்களில் வழுவழுவென இருந்த தோல் சொரசொரப்பாக மாறும். அந்நிலையில் மேற்கண்ட கலவையை பூசவதை ஒருநாள் நிறுத்திவிட்டு மறுநாள் முதல் மீண்டும் பூசவும்.

முடி முளைக்கும் வரை மேற்கண்ட கலவையை பூசுவதும் சொரசொரப்பு வந்தவுடன் நிறுத்திப் பின் மறுநாள் பூசுவதையும் தொடரவேண்டும். ஐந்தாறு நாட்களில் முடி முளைக்கத் தொடங்கும். முதலில் பூனைமுடி போல முளைக்கத் தொடங்கி பின் இயல்பான முடியாக சில வாரங்களில் முளைத்து விடும்.

முடி முளைக்கத் தாமதப்படும்போது அவ்விடத்தில் கரிசாலை மடக்குத் தைலம் தேய்த்து வந்தால் விரைவில் குணம் கிடைக்கும்.

Monday 31 October 2016

நஷ்டம் இல்லாத ஊடுபயிர் விவசாயம்


முன்பெல்லாம் லாபமோ நஷ்டமோ ஒரே பயிரை விளைவித்துவிட்டு விவசாயிகள் பேசாமல் இருந்தார்கள். இது கொஞ்சம் கொஞ்சமாக மாறி, ஊடுபயிர் விவசாயம் தற்போது பரவலாகி வருகிறது. 

நடவுசெய்யும் முதன்மைப் பயிருக்கு ஏற்ற ஊடுபயிர்களை விளைப்பதன் மூலம் விவசாயிகள் நஷ்டத்தைத் தவிர்க்க முடிகிறது, பல நேரம் கூடுதல் பலனையும் பெற முடிகிறது. இதனால் ஒரு பயிரை நம்பி விவசாயம் மேற்கொண்ட நிலை மாறி, ஊடுபயிர் விவசாயம் மூலம் பல்வேறு பயிர்கள் பயிரிடும் முறைக்கு விவசாயிகள் மாறிவருகின்றனர். 

ஒரே பாசனம் 
 
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையைச் சேர்ந்தவர் விவசாயி ஏ. ரசூல் மொகைதீன். இவர் தன்னுடைய தென்னந்தோப்பில் பாக்குமரம், ஜாதிக்காய் போன்றவற்றை ஊடுபயிராகப் பயிரிட்டுள்ளார். பணப்பயிரான மிளகு, பாக்கு மரத்தைப் பற்றி படர்ந்து மேலே கொடியாக ஏறுகிறது.
தென்னைமரத்தில் ஊடுபயிராகக் கோக்கோ பயிரிட வேளாண்மைத் துறையினரால் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் கோக்கோவைவிட பாக்குமரம், ஜாதிக்காய், மிளகுக் கொடிகள் மூலம் அதிக லாபம் கிடைப்பதால், கோக்கோவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மற்ற ஊடுபயிர்களை நடவுசெய்துள்ளார் ஏ. ரசூல் மொகைதீன். 

தென்னந்தோப்பு முழுவதும் சொட்டுநீர்ப் பாசனம் கொடுத்துள்ளார். இதனால் தென்னைக்கு நீர்ப்பாசனம் கிடைக்கும்போதே அருகில் நடப்பட்டுள்ள பாக்குமரம், ஜாதிக்காய் மரம், மிளகுக் கொடி ஆகியவற்றுக்கும் பாசனம் கிடைக்கிறது. 

பராமரிக்காத மிளகில் லாபம் 
 
தென்னை மரங்களில் ஏறிக் காய் பறிக்க ஒரு மரத்துக்கு ரூ.15 வரை கூலி கேட்கப்படுவதால் செலவைக் குறைப்பதற்காக மரத்தில் இருந்து தேங்காய் விழும்வரை விட்டுவிடுகிறார். 

இந்தத் தேங்காய்கள் கொப்பரைக்கு (எண்ணெய் எடுக்க) பயன்படுத்தப்படுகின்றன. தேங்காய் விற்பனையைவிட கொப்பரை விற்பனையில் கணிசமான லாபம் கிடைக்கிறது. பாக்குமரத்தை ஒப்பந்த அடிப்படையில் மொத்தமாகப் பேசிவிட்டால், வாங்குபவர்களே தோட்டத்தில் வந்து பறித்துச் செல்கின்றனர். ஜாதிக்காய் மருத்துவ குணம் மிக்கது என்பதால் தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர். மிளகு விளைச்சலை அறிய, ஒரு மிளகுக் கொடியைப் பார்த்தாலே தெரிந்துவிடுகிறது. மிளகு கொத்துக்கொத்தாகக் காய்த்துக் குலுங்குகிறது. சந்தையில் மிளகுக்கு எப்போதும் மவுசு உண்டு என்பதால், பண்ணையில் தனியாகப் பராமரிக்காத மிளகுக் கொடியே அதிக வருவாயைக் கொடுக்கிறது. 

தென்னைமரங்களின் அடிப்பகுதியில் மண்புழுக்கள் ஏராளமாக வளர்க்கப்படுகின்றன. இவையே மரத்துக்கு இயற்கை உரங்களைத் தருகின்றன. இதனால் தனி உரச் செலவு இல்லை. சொட்டுநீர்ப் பாசனம் மூலம் அவ்வப்போது தண்ணீரை முறையாகப் பாய்ச்சினாலே போதும் என்றநிலை உள்ளது. 

நஷ்டத்துக்கு வழியில்லை 
 
தன்னுடைய பண்ணைய முறை குறித்து விவசாயி ஏ. ரசூல் மொகைதீன் பகிர்ந்துகொண்டது: “தென்னையை மட்டுமே நம்பியிருந்தால் திடீரென விலை வீழ்ச்சி ஏற்படும்போது விவசாயிக்கு நஷ்டம் ஏற்படும். இதனால் அடுத்து மரங்களைப் பராமரிக்கச் சிரமப்பட வேண்டியிருக்கும். இதனால்தான் ஊடுபயிர்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். தேங்காய்கள் வழக்கமான வருமானத்தைத் தந்தாலும், தென்னையைப் பராமரிக்கும் செலவைக் கொண்டே ஜாதிக்காய், பாக்குமரம், மிளகுக் கொடி ஆகியவற்றை ஊடுபயிராக விளைவிப்பதால் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. 

ஒரே செலவு என்றாலும், தென்னை, ஜாதிக்காய், பாக்கு, மிளகு என நான்கு வழிகளில் பலன் கிடைக்கிறது. இப்படி முதன்மைப் பயிருக்கு இடையே ஊடுபயிர்களைத் தேர்வு செய்து பயிரிட்டால், ஒரு பயிருக்கு விலை இல்லாத நிலை ஏற்பட்டாலும், மற்றவை சமாளித்துவிடும். எனவே, விவசாயிகள் எதிர்காலத்தில் ஒரு பயிர் விவசாயம் செய்வதைவிட, ஊடுபயிராக வேறு பயிர்களையும் பயிரிட்டால் எந்தவிதத்திலும் விவசாயத்தால் நஷ்டம் அடைய வாய்ப்பில்லை” என்றார்.

விவசாயி ரசூல் மொகைதீன் தொடர்புக்கு: 9443736984

Monday 29 December 2014

தலைவா வா!

‘ஒரு தலைவனைப் போல் பேசுங்கள்’ எனும் ஜீடித் ஹம்ப்ரே எழுதிய (ஸ்பீக்கிங் அஸ் எ லீடர்) புத்தகம் தலைவர்களுக்கு (லீடர் அலுவலகமானாலும் சரி, அரசிய லானாலும் சரி) பேச்சுத்திறன் எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துரைக்கின்றது. 

* நேர்மறை சிந்தனை
* தொடர்ச்சியான கடின முயற்சி
* பிரமாண்ட நம்பிக்கை
* மகா பொறுமை

போர்டு ரூமோ அல்லது மீட்டிங் ரூமோ, பொதுமேடையோ அல்லது சாதாரணமாய் பேசும் ஒரு டெலிபோன் காலோ ஒவ்வொரு முறை நீங்கள் பேசும் போதும் அந்தப் பேச்சில் தலைமைப் பண்புகள் நிறைந்திருக்குமாறு பார்த்துக்கொள்வது எப்படி? என்பதைச் சொல்கின்றார் ஆசிரியர். 

இருபத்தி ஐந்து வருடங்களுக்கும் மேலாக லீடர்ஷிப் பயிற்சிகளை அளித்து வரும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அலுவலகத்தில் அடுத்தவரிடத்தில் பேசும் ஒவ்வொரு பேச்சும் நமக்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பு. அதை மற்றவர் களிடத்தில் நம்முடைய செல்வாக்கை உயர்த்திக்கொள்ளும் விதத்திலும் (இன்ஃப்ளுயன்ஸ்), நம்முடைய ஆளுமைத் திறமையை உணர்ந்து நம்மீது ஈர்ப்புகொள்ளும் விதத்திலும் (இன்ஸ்ப்பையர்) உபயோகித்துக் கொள்வது எப்படி என்பதை தெளிவு படுத்துகின்றார். திறமையான லீடர்கள் அவர்கள் வகிக்கும் பதவி மட்டுமே அவர்களுக்கு பெரிய அளவிலான மரி யாதையை உண்டுபண்ணுவது இல்லை என்பதை புரிந்து வைத்திருக்கின்றார்கள். 

தலைவனின் மதிப்பு
ஒரு லீடரின் மதிப்பை உயர்த்துவது என்பது அவர்களை முழுமையாக நம்புபவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில்தான் இருக்கின்றது என் பதையும் தெளிவாய்ப் புரிந்துவைத் துள்ளனர். அதனாலேயே, அவர்கள் பேசுவதற்குக் கிடைக்கும் வாய்ப்பை, அது மேடைப்பேச்சானாலும் சரி, பிரசன் டேஷனானாலும் சரி, போன் பேசுவதிலானாலும் சரி, ஏன் அலுவலகத்தில் மின் தூக்கியில் (லிப்ட்) சக ஊழியர்களுடன் பயணிக்கும் போதானாலும் சரி முழு மையாக தங்களுடைய தலைமைப் பண்பை வெளிக்காட்டும் விதத்தில் அமைத்துக்கொள்ளத் தவறுவதே யில்லை. 

சக பணியாளார், சீனியர் மேனேஜ்மெண்ட், வாடிக்கையாளர், தொழில் கூட்டாளிகள் என பலதரப்பட்ட நபர்களிடத்திலுமே லீடர்கள் பேசும் போது ஒரு சுறுசுறுப்பான பரபரப்பு பற்றிக்கொள்ளும் வகையில் தங்கள் பேச்சை அமைத்துக்கொள்கின்றனர் என்கின்றார் ஆசிரியர். 

லீடர்களின் இந்தப் பண்புகளை ஆராய்ந்தறிந்து ஜீடித் ஹம்ப்ரெயின் நிறுவனம் கண்டுபிடித்ததுதான் லீடர்ஷிப் மாடல் எனும் பேச்சாற்றலை பெருக்கு வதற்கான வழிமுறையை. இந்த மாடல் சொல்வது என்ன என்று பார்த்தால் ஒவ் வொரு சமயத்திலும் ஒரு தலைவனைப் போல் பேசுவது எப்படி? என்பதற்கான விஷயங்களைத்தான். 

இந்த மாடலில் கொடுக்கப்பட்டிருப்பதைப் போல் ஒரு லீடர் தன்னுடைய பேச்சு குறித்த நடை முறைகளை மாற்றியமைத்துக்கொண் டால் அதன் பின்னர் அவர் பேசுவது நீண்டதொரு மேடைப்பேச்சானாலும் சரி, அலுவலகத்தில் லிப்டில் பயணிக்கும் போது பேசும் ஒரு சில வினாடிகளுக்கான பேச்சானாலும் சரி அது முழுக்க முழுக்க தலைமைப் பண்பை கொண்ட பேச்சாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை தருகின்றார் ஆசிரியர். நான்கு படி நிலைகளைக் கொண்ட இந்த மாடலை நீங்கள் பின்பற்றும் போது உங்களின் உள்ளே ஓளிந்திருக்கும் தலைமைப் பண்பு வெளிக்கொணரப்பட்டு மிளிரும் என் கின்றார் ஆசிரியர். 

தலைவனைப் போல் சிந்திப்பது
தலைவனாய் மாற முதலில் தலை வனைப் போல் சிந்திக்க வேண்டும். நான் எந்த மாதிரியான தலைமைப் பண்புகளைக் கொண்டு திகழப்போகின் றேன் என்பதை சிந்தித்து மனதில் உரு வேற்றவேண்டும். அந்தச் சிந்தனை யின் விளைவால் பெற்ற எண்ணங் களை நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு பேசும் வாய்ப்பிலும் நாம் அழுத்தந்திருத் தமாய் வெளிப்படுத்தும் வகையில் நம்முடைய பேச்சை அமைக்க நாம் முயற்சிக்கவேண்டும். நல்ல தலைவர்கள் நன்றாகப் புரிந்து வைத்திருப்பது ஒரே ஒரு விஷயத்தைத்தான். அவர்களுடைய பேச்சு கேட்பவர்களை ஈர்க்கப்படும் படி அமைக்கப்பட்டிருக்கவேண்டுமே தவிர வெறுமனே தகவல் பரிமாற்றத்திற்கு உதவுவதைப் போல் ஒரு போதும் அமைக் கப்பட்டுவிடக்கூடாது எனபதுதான் அது. 

இது மட்டுமல்ல நல்ல தலைவர் கள் அடுத்தவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கவும், மற்றவர்களிட மிருந்து நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ளவும் தெரிந்துவைத்துக் கொண் டிருக்கின்றார்கள் என்கிறார் ஆசிரியர். 

தலைவன் போன்ற பேச்சை தயாரிப்பது
நம்முடைய பேச்சைக் கேட்பவர்கள் எந்த விதமான எதிர்பார்ப்புடன் இருப்பார் கள் என்பதை சிறந்த தலைவர்கள் தங்கள் விரல் நுனியில் வைத்துள்ளனர் என்று சொல்லும் ஆசிரியர் பேச்சின் ஆரம்பமே அனைவரையும் அட என்னமா பேசுகின்றார் என நினைக்க வைத்து கூர்ந்து கேட்கத் தூண்டுவதாய் அமைய வேண்டும் என்கின்றார். அப்படி பேச்சைக் கேட்கும் நபர்கள் கூர்ந்து கேட்க ஆரம்பிக்கும் போது உடனடியாக உங்கள் பேச்சின் அடிநாதம் என்ன என்பதைச் சொல்லிவிட வேண்டும் என்கின்றார். தலைவனின் பேச்சில் இருக்கக்கூடிய முக்கியமான விஷயமே அந்த அடிநாதம்தான். அதுதான் பவர்புல்லான ஒன்று. 

உழைப்பைக் கூட்டவேண்டுமா, திறனை அதிகரிக்க வேண்டுமா, போகும் பாதையை மாற்ற வேண்டுமா, போராட் டம் நடத்தவேண்டுமா என என்ன அப்போது பேசும் பேச்சின் அடிநாதம் என்பதை பேச்சைக்கேட்பவர்கள் கூர்ந்துகேட்கும் போதே உடனுக்குடன் சொல்லிவிடவேண்டும். ஏனென்றால், அந்தப் பேச்சின் வெற்றியே தலைவன் சொல்வதை கேட்பவர்கள் அதை முழுமையாக கேட்டு, நம்பி அதற்குண்டான நடவடிக்கைதனில் ஈடுபட்டால்தான் கிடைக்கும் இல்லையா? என்று கேட்கின்றார் ஆசிரியர். 

தலைவனின் சொல்வன்மை
தலைசிறந்த தலைவர்கள் எந்த வார்த்தையை எங்கு உபயோகப்படுத்து கின்றோம் என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார்கள். வார்த்தைகளை மிகவும் திட்டமிட்டு செதுக்கி செப்பனிட்டு தங்களுடைய பேச்சில் இணைப்பார்கள் என்கின்றார் ஆசிரியர். ஏனென்றால், வார்த்தைகளே பேச்சின் கருத்தை எடுத்துச்செல்லும் வாகனமாய் இருக்கின்றது. 

கவனத்தை ஈர்ப்பதிலும், நம்பவைப் பதிலும், உளமாரவும் உணர்ச்சிப்பூர்வ மாகவும் செயல்படவைப்பதிலும் வார் த்தைகளின் பங்கு மிகமிக அதிகம் என ஆணித்தரமாகச் சொல்லும் ஆசிரியர் இதனாலேயே வார்த்தைகளைத் தேர்ந் தெடுப்பதில் தலைவர்கள் அதிக கவ னத்தை மேற்கொள்ள வேண்டியிருக் கின்றது என்கின்றார். தெளிவான, பேச்சு வழக்கில் உள்ள, ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் சென்றடையக் கூடிய, அலங்காரமான, வலிமையான வார்த்தைகளே சொல்லும் விஷயத்தை அதிரடியாய் கேட்பவரிடத்தில் கொண்டு போய் சேர்க்கின்றது என்பதைத் தலை வர்கள் தெளிவாய்ப் புரிந்துவைத்துக் கொண்டுள்ளனர் என்கின்றார் ஆசிரியர்.

‘தலைவன்டா’ என்ற எண்ணத்தை கேட்பவரிடத்தில் கொண்டுவருதல்
தலைவர்கள் ஒரு நடிகரைப் போல. அவரே சொல்லும் கருத்துக்கும் பேச்சுக் கும் உயிரைக் கொண்டுவருபவர். அது எப்படி பேச்சுக்கு உயிர்வரும் என்கின்றீர்களா? காட்டும் எனர்ஜி, கண்ணில் தெரியும் தீர்க்கம், கை மற்றும் உடல்மொழி, குரலின் ஏற்ற இறக்கம் என ஒரு நடிகராகவே மாறி தன்னுடைய பேச்சுக்கு உயிர்கொடுத்து கேட்பவர்களிடையே ஒரு பெரும் மாற்றத்தை கொண்டுவரவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள் தலைவர்கள். 

தனிமனிதர்களிடம் பேசுகின்றீர் களோ அல்லது பெரும் கூட்டத்தில் பேசுகின்றீர்களோ, பேசுவது தலைவன், அவன் நம்முடன் இருக்கின்றான், நான் அவனுடன்தான் இருப்பேன் என்பதை தெளிவாய் வெளிப்படுத்தும் அளவுக்கு உங்கள் நடவடிக்கை இருக்கவேண்டும் என்கின்றார் ஆசிரியர்.
இதெல்லாம் எழுதுவதற்கும் படிப் பதற்கும் நன்றாயிருக்கும். எப்படி இதை யெல்லாம் திட்டமிட்டுச் செய்வது. சாத்தியமில்லாததைப் போல் இருக் கின்றதே என என்னுடைய வாடிக்கை யாளர்கள் என்னிடம் கேட்டதைப் போல் நீங்கள் நினைக்கலாம் என்று சொல்லும் ஆசிரியர் தொடர்ந்து இந்த மாடலில் சொல்லப்பட்டிருப்பவற்றை செக்லிஸ்ட் போல் வைத்துக்கொண்டு உபயோகித்துவந்தால் ஒரு கால கட்டத் தில் உங்களின் வாழ்க்கை முறையாகவே அது மாறிவிடும் என்பதைத்தான் நான் அவர்களுக்கு சொல்லவும் என்னுடைய பேச்சுத்திறனால் உணர்த்தவும் செய் கின்றேன் என்கின்றார். 

எண்ணத்தை செயலாக மாற்றவும், பவர்புல்லான தலைவனாகத் திகழவும் தலைவனுக்குத் தேவையானதும் உதவு வதும் பேச்சுத்திறன் மட்டுமே. இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் வழியினைப் பின்பற்றினால் ஓவ்வொரு முறை பேசும் போதும் நீங்கள் தலைவனாகவே உணரப்படுவீர்கள் என்கின்றார் ஆசிரியர். பின்பற்றிப் பயனடையுங்களேன்.

Tuesday 16 December 2014

பணியாளர் குறைப்பு: டிசிஎஸ் தீவிரம்

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தில் மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இந்த நடவடிக்கை வரும் 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலை இழப்பார்கள் என்று தெரிகிறது. இதில் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் பணிபுரிபவர்களையும் நீக்கும் திட்டத்தில் இருக்கிறது டிசிஎஸ். அதே சமயத்தில், இந்த வருடத்தில் புதிதாக 55,000 பணியாளர்களை வேலைக்கு எடுப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் தெரிகிறது.
ஒவ்வொரு பிரிவிலும் இருக்கும் நடுத்தர வயது பிரிவு நபர்களை டிசிஎஸ் குறிவைத்திருப்பதாகத் தெரிகிறது. 20 வருட அனுபவத்துடன் 25,000-க்கும் மேற்பட்டோர் டிசிஎஸ்-ல் இருக்கிறார்கள். 

செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தில் 3,13,757 நபர்கள் பணியில் இருக்கிறார்கள். 1990-களில் வேலைக்கு சேர்ந்த பல பணியாளர்கள், தற்போதைய சூழலுக்கு ஏற்ப தங்களை தயார் செய்துகொள்ளவில்லை. அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.இல்லையெனில் நிறுவனத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று டிசிஎஸ் நினைக்கிறது. 

பணியாளர் குறைப்பு குறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் சர்வதேச மனிதவள பிரிவு தலைவர் அஜோயேந்திர முகர்ஜி கூறியது; தற்போது எடுக்கப்போகும் நடவடிக்கை ஒன்றும் சிறப்பு நடவடிக்கை அல்ல, இது ஒரு தொடர் நடவடிக்கைதான். மேலும் நாங்கள் புதிதாக மேற்கொள்ளும் நடவடிக்கை அல்ல. 

வருடம் முழுவதும் தொடர்ந்து நடப்பதுதான். செயல்பாடுகளின் அடிப்படையில் இயங்குகிறது எங்கள் நிறுவனம். அதனால் ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களின் செயல்பாடும் இங்கு முக்கியம். மேலும் நாங்கள் சம்பள உயர்வு பற்றியும் பேசுவோம். அப்போது பணியாளர்களின் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்வது அவசியம். 

மேலும் எவ்வளவு பேரை நீக்கப்போகிறீர்கள் என்ற கேள்வி எழுகிறது. அப்படி இலக்கு வைத் துக்கொண்டு நாங்கள் செயல்படவில்லை என்றார்.

Tuesday 25 November 2014

ஓட்ஸ் உண்மைகள்




ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது.

அது தவிடு மற்றும் அதன் நுண்மங்களைக் கொண்ட உணவாகும்.

ஓட்ஸ் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது. அவற்றுள் சில: இது கொழுப்புச்சத்து அளவை குறைக்கிறது, இருதய செயல்பாடு மற்றும் உடல் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் தேவையான வளர்சிதை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

 உடல் எடையை குறைக்கும் பண்பை இது கொண்டுள்ளதால் ஓட்ஸ் அதிகமான புகழைக் கொண்டுள்ளது.


அதிகமான மக்கள் ஓட்ஸ்கஞ்சி குடிப்பதின் மூலம் உடல் எடை குறைகிறது என்று நம்புகின்றனர். ஓட்ஸ்கஞ்சி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உடனடி உணவு பொருட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப்பொட்டலங்கள் சந்தைகளில் கிடைக்கின்றன.

 ஓட்ஸ் உணவின் மூலம் உடல் எடை குறைகிறது என்று இங்குள்ள நிறைய விளக்கங்கள் மற்றும் உதாரணங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு இந்த ஒரு உணவு மட்டும் போதும் என்று கூற முடியாது. உடல் எடையை குறைக்கும் பத்தியத்தில் ஓட்ஸ் என்பது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது .

ஓட்ஸில் வைட்டமின்கள், நார்ச்சத்து, கனிமச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமில்லாமல் இருதய நோயை தடுப்பதற்கும் ஓட்ஸ் பயன்படுகிறது.

சில விளக்கங்கள் மற்றும் உண்மைகள் மூலம் ஓட்ஸ் பத்தியம் என்பது உடல் எடையை குறைக்க சிறந்த வழி என்று நிரூபிக்கபட்டுள்ளதை கீழே காண்போம்:

அதிக அளவு நார்ச்சத்து உள்ள தானியங்கள்


ஓட்ஸில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக அளவிலான இந்த நார்ச்சத்தானது, கொழுப்புச்சத்து மற்றும் ரத்தத்திலுள்ள சர்க்கரையை குறைக்க உதவுகிறது. இது போக வயிறு நிறைந்த உணர்வை உண்டாக்கும் ஓட்ஸ். இதன் மூலம் பசி உணர்ச்சி தவிர்க்கப்படுகிறது.

எடையை குறைக்க வேண்டுமென்றால் பசியை கட்டுப்படுத்தி, சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். அதிக அளவிலான நார்ச்சத்து உணவுகளை உண்பது இதயத்துக்கும் நல்லது.

அதிக ஆற்றலை தரும் தானியம்


ஓட்ஸ் அதிக ஆற்றலை அளித்து வேலை செய்யும் திறனை உடலுக்கு அளிக்கிறது. ஓட்ஸ் கஞ்சியை காலையில் எடுத்துக் கொண்டால், அந்த முழு நாளைக்கு தேவையான சக்தியையும் திறனையும் அது அளிக்கிறது. இதனால் பலர் ஓட்ஸை காலை உணவாக உட்கொள்கின்றனர்.

ஓட்ஸினால் கிடைக்கும் அதிக அளவிலான ஆற்றல், உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எரிக்கப் படுகிறது. மேலும் ஓட்ஸ் உடலின் எடையை குறைத்து உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. இதற்காகவே ஓட்ஸால் செய்யப்பட்ட உணவுகளை காலை உணவாக எடுத்து கொள்வது சிறந்தது.

அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள்


ஓட்ஸில் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கி, உடலை புனரமைக்க உதவுகிறது. அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்குகிறது.

 இது உடலில் உள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை வெளித் தள்ளுவதால், உடல் எடை குறைவதுடன் உடல் சுத்தமும் ஆகிறது. ஆண்டி ஆக்சிடன்ட்கள் உடல் உறுப்புகளின் இயக்கத்திலும், அவற்றை சரி செய்வதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது.

குறைந்த கலோரி உள்ள தானியம்

ஓட்ஸானது மற்ற தானியங்களை விட குறைந்த அளவிலான கலோரிகளையே உடையது. இதன் காரணமாகவே உடல் எடை குறைப்பவர்களுக்கு இது சிறந்த உணவாகிறது. பொதுவாக குறைந்த கலோரி உணவுகள் அதிக அளவிலான கொழுப்புகளை குறைக்க வல்லது.

 ஓட்ஸ் ஒரு அடர்த்தி குறைந்த உணவு. ஆதலால் இது எடையை குறைக்கும் உணவு முறையில் முதலிடம் பெறுகிறது. ஓட்ஸ் மட்டும் தனித்து உடல் எடையை குறைத்து விடாது. மற்ற ஆரோக்கியமான சரிவிகித உணவுகளோடு சேர்ந்தே ஓட்ஸ் எடையை குறைக்கிறது.

தயாரிப்பதற்கு சுலபம்


ஓட்ஸ் என்பது ஒரு ஆரோக்கியமான முழு தானியம். பொதுவாக முழுதானியங்கள் சமைப்பதற்கும், உண்ணுவதற்கும் எளிதானவை. பொதுவாக ஓட்ஸ் கஞ்சியாக தயாரிக்கப்படுகிறது. பால் மற்றும் பழங்களோடு சேர்த்து இது உண்ணப்படுகிறது.

இந்த காலத்தில் ஓட்ஸை கொண்டு பல துரித உடனடி உணவுகள் தயார் செய்யப்படுகிறது. காலை உணவாக அவைகள் எடுத்து கொள்ளப்படுகின்றன. துரித உணவுகள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளில் கூட ஓட்ஸ் தனது சத்துகளை இழப்பதில்லை. இந்த அனைத்து உண்மைகள் மூலம் ஓட்ஸ் எடை குறைய சிறந்த உணவு என்பதை அறியலாம்.
 
Thanks: http://superstarready.blogspot.com/2014/11/blog-post_91.html