‘ஒரு தலைவனைப் போல் பேசுங்கள்’ எனும் ஜீடித் ஹம்ப்ரே எழுதிய (ஸ்பீக்கிங் 
அஸ் எ லீடர்) புத்தகம் தலைவர்களுக்கு (லீடர் அலுவலகமானாலும் சரி, அரசிய 
லானாலும் சரி) பேச்சுத்திறன் எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துரைக்கின்றது. 
* நேர்மறை சிந்தனை
* தொடர்ச்சியான கடின முயற்சி
* பிரமாண்ட நம்பிக்கை
* மகா பொறுமை
* தொடர்ச்சியான கடின முயற்சி
* பிரமாண்ட நம்பிக்கை
* மகா பொறுமை
போர்டு ரூமோ அல்லது மீட்டிங் ரூமோ, பொதுமேடையோ அல்லது சாதாரணமாய் பேசும் 
ஒரு டெலிபோன் காலோ ஒவ்வொரு முறை நீங்கள் பேசும் போதும் அந்தப் பேச்சில் 
தலைமைப் பண்புகள் நிறைந்திருக்குமாறு பார்த்துக்கொள்வது எப்படி? என்பதைச் 
சொல்கின்றார் ஆசிரியர். 
இருபத்தி ஐந்து வருடங்களுக்கும் மேலாக லீடர்ஷிப் பயிற்சிகளை அளித்து வரும் 
இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அலுவலகத்தில் அடுத்தவரிடத்தில் பேசும் 
ஒவ்வொரு பேச்சும் நமக்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பு. அதை மற்றவர் களிடத்தில் 
நம்முடைய செல்வாக்கை உயர்த்திக்கொள்ளும் விதத்திலும் (இன்ஃப்ளுயன்ஸ்), 
நம்முடைய ஆளுமைத் திறமையை உணர்ந்து நம்மீது ஈர்ப்புகொள்ளும் விதத்திலும் 
(இன்ஸ்ப்பையர்) உபயோகித்துக் கொள்வது எப்படி என்பதை தெளிவு 
படுத்துகின்றார். திறமையான லீடர்கள் அவர்கள் வகிக்கும் பதவி மட்டுமே 
அவர்களுக்கு பெரிய அளவிலான மரி யாதையை உண்டுபண்ணுவது இல்லை என்பதை புரிந்து
 வைத்திருக்கின்றார்கள். 
தலைவனின் மதிப்பு 
ஒரு லீடரின் மதிப்பை உயர்த்துவது என்பது அவர்களை முழுமையாக நம்புபவர்களின் 
எண்ணிக்கையை உயர்த்துவதில்தான் இருக்கின்றது என் பதையும் தெளிவாய்ப் 
புரிந்துவைத் துள்ளனர். அதனாலேயே, அவர்கள் பேசுவதற்குக் கிடைக்கும் 
வாய்ப்பை, அது மேடைப்பேச்சானாலும் சரி, பிரசன் டேஷனானாலும் சரி, போன் 
பேசுவதிலானாலும் சரி, ஏன் அலுவலகத்தில் மின் தூக்கியில் (லிப்ட்) சக 
ஊழியர்களுடன் பயணிக்கும் போதானாலும் சரி முழு மையாக தங்களுடைய தலைமைப் 
பண்பை வெளிக்காட்டும் விதத்தில் அமைத்துக்கொள்ளத் தவறுவதே யில்லை. 
சக பணியாளார், சீனியர் மேனேஜ்மெண்ட், வாடிக்கையாளர், தொழில் கூட்டாளிகள் என
 பலதரப்பட்ட நபர்களிடத்திலுமே லீடர்கள் பேசும் போது ஒரு சுறுசுறுப்பான 
பரபரப்பு பற்றிக்கொள்ளும் வகையில் தங்கள் பேச்சை அமைத்துக்கொள்கின்றனர் 
என்கின்றார் ஆசிரியர். 
லீடர்களின் இந்தப் பண்புகளை ஆராய்ந்தறிந்து ஜீடித் ஹம்ப்ரெயின் நிறுவனம் 
கண்டுபிடித்ததுதான் லீடர்ஷிப் மாடல் எனும் பேச்சாற்றலை பெருக்கு வதற்கான 
வழிமுறையை. இந்த மாடல் சொல்வது என்ன என்று பார்த்தால் ஒவ் வொரு சமயத்திலும்
 ஒரு தலைவனைப் போல் பேசுவது எப்படி? என்பதற்கான விஷயங்களைத்தான். 
இந்த மாடலில் கொடுக்கப்பட்டிருப்பதைப் போல் ஒரு லீடர் தன்னுடைய பேச்சு 
குறித்த நடை முறைகளை மாற்றியமைத்துக்கொண் டால் அதன் பின்னர் அவர் பேசுவது 
நீண்டதொரு மேடைப்பேச்சானாலும் சரி, அலுவலகத்தில் லிப்டில் பயணிக்கும் போது 
பேசும் ஒரு சில வினாடிகளுக்கான பேச்சானாலும் சரி அது முழுக்க முழுக்க 
தலைமைப் பண்பை கொண்ட பேச்சாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை தருகின்றார் 
ஆசிரியர். நான்கு படி நிலைகளைக் கொண்ட இந்த மாடலை நீங்கள் பின்பற்றும் போது
 உங்களின் உள்ளே ஓளிந்திருக்கும் தலைமைப் பண்பு வெளிக்கொணரப்பட்டு மிளிரும்
 என் கின்றார் ஆசிரியர். 
தலைவனைப் போல் சிந்திப்பது 
தலைவனாய் மாற முதலில் தலை வனைப் போல் சிந்திக்க வேண்டும். நான் எந்த 
மாதிரியான தலைமைப் பண்புகளைக் கொண்டு திகழப்போகின் றேன் என்பதை சிந்தித்து 
மனதில் உரு வேற்றவேண்டும். அந்தச் சிந்தனை யின் விளைவால் பெற்ற எண்ணங் களை 
நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு பேசும் வாய்ப்பிலும் நாம் அழுத்தந்திருத் தமாய் 
வெளிப்படுத்தும் வகையில் நம்முடைய பேச்சை அமைக்க நாம் முயற்சிக்கவேண்டும். 
நல்ல தலைவர்கள் நன்றாகப் புரிந்து வைத்திருப்பது ஒரே ஒரு விஷயத்தைத்தான். 
அவர்களுடைய பேச்சு கேட்பவர்களை ஈர்க்கப்படும் படி 
அமைக்கப்பட்டிருக்கவேண்டுமே தவிர வெறுமனே தகவல் பரிமாற்றத்திற்கு உதவுவதைப்
 போல் ஒரு போதும் அமைக் கப்பட்டுவிடக்கூடாது எனபதுதான் அது. 
இது மட்டுமல்ல நல்ல தலைவர் கள் அடுத்தவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் 
கேட்கவும், மற்றவர்களிட மிருந்து நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ளவும் 
தெரிந்துவைத்துக் கொண் டிருக்கின்றார்கள் என்கிறார் ஆசிரியர். 
தலைவன் போன்ற பேச்சை தயாரிப்பது 
நம்முடைய பேச்சைக் கேட்பவர்கள் எந்த விதமான எதிர்பார்ப்புடன் இருப்பார் கள்
 என்பதை சிறந்த தலைவர்கள் தங்கள் விரல் நுனியில் வைத்துள்ளனர் என்று 
சொல்லும் ஆசிரியர் பேச்சின் ஆரம்பமே அனைவரையும் அட என்னமா பேசுகின்றார் என 
நினைக்க வைத்து கூர்ந்து கேட்கத் தூண்டுவதாய் அமைய வேண்டும் என்கின்றார். 
அப்படி பேச்சைக் கேட்கும் நபர்கள் கூர்ந்து கேட்க ஆரம்பிக்கும் போது 
உடனடியாக உங்கள் பேச்சின் அடிநாதம் என்ன என்பதைச் சொல்லிவிட வேண்டும் 
என்கின்றார். தலைவனின் பேச்சில் இருக்கக்கூடிய முக்கியமான விஷயமே அந்த 
அடிநாதம்தான். அதுதான் பவர்புல்லான ஒன்று. 
உழைப்பைக் கூட்டவேண்டுமா, திறனை அதிகரிக்க வேண்டுமா, போகும் பாதையை மாற்ற 
வேண்டுமா, போராட் டம் நடத்தவேண்டுமா என என்ன அப்போது பேசும் பேச்சின் 
அடிநாதம் என்பதை பேச்சைக்கேட்பவர்கள் கூர்ந்துகேட்கும் போதே உடனுக்குடன் 
சொல்லிவிடவேண்டும். ஏனென்றால், அந்தப் பேச்சின் வெற்றியே தலைவன் சொல்வதை 
கேட்பவர்கள் அதை முழுமையாக கேட்டு, நம்பி அதற்குண்டான நடவடிக்கைதனில் 
ஈடுபட்டால்தான் கிடைக்கும் இல்லையா? என்று கேட்கின்றார் ஆசிரியர். 
தலைவனின் சொல்வன்மை 
தலைசிறந்த தலைவர்கள் எந்த வார்த்தையை எங்கு உபயோகப்படுத்து கின்றோம் 
என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார்கள். வார்த்தைகளை மிகவும் திட்டமிட்டு 
செதுக்கி செப்பனிட்டு தங்களுடைய பேச்சில் இணைப்பார்கள் என்கின்றார் 
ஆசிரியர். ஏனென்றால், வார்த்தைகளே பேச்சின் கருத்தை எடுத்துச்செல்லும் 
வாகனமாய் இருக்கின்றது. 
கவனத்தை ஈர்ப்பதிலும், நம்பவைப் பதிலும், உளமாரவும் உணர்ச்சிப்பூர்வ 
மாகவும் செயல்படவைப்பதிலும் வார் த்தைகளின் பங்கு மிகமிக அதிகம் என 
ஆணித்தரமாகச் சொல்லும் ஆசிரியர் இதனாலேயே வார்த்தைகளைத் தேர்ந் தெடுப்பதில்
 தலைவர்கள் அதிக கவ னத்தை மேற்கொள்ள வேண்டியிருக் கின்றது என்கின்றார். 
தெளிவான, பேச்சு வழக்கில் உள்ள, ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் 
சென்றடையக் கூடிய, அலங்காரமான, வலிமையான வார்த்தைகளே சொல்லும் விஷயத்தை 
அதிரடியாய் கேட்பவரிடத்தில் கொண்டு போய் சேர்க்கின்றது என்பதைத் தலை வர்கள்
 தெளிவாய்ப் புரிந்துவைத்துக் கொண்டுள்ளனர் என்கின்றார் ஆசிரியர்.
‘தலைவன்டா’ என்ற எண்ணத்தை கேட்பவரிடத்தில் கொண்டுவருதல் 
தலைவர்கள் ஒரு நடிகரைப் போல. அவரே சொல்லும் கருத்துக்கும் பேச்சுக் கும் 
உயிரைக் கொண்டுவருபவர். அது எப்படி பேச்சுக்கு உயிர்வரும் என்கின்றீர்களா? 
காட்டும் எனர்ஜி, கண்ணில் தெரியும் தீர்க்கம், கை மற்றும் உடல்மொழி, 
குரலின் ஏற்ற இறக்கம் என ஒரு நடிகராகவே மாறி தன்னுடைய பேச்சுக்கு 
உயிர்கொடுத்து கேட்பவர்களிடையே ஒரு பெரும் மாற்றத்தை கொண்டுவரவேண்டிய 
கட்டாயத்தில் இருக்கின்றார்கள் தலைவர்கள். 
தனிமனிதர்களிடம் பேசுகின்றீர் களோ அல்லது பெரும் கூட்டத்தில் 
பேசுகின்றீர்களோ, பேசுவது தலைவன், அவன் நம்முடன் இருக்கின்றான், நான் 
அவனுடன்தான் இருப்பேன் என்பதை தெளிவாய் வெளிப்படுத்தும் அளவுக்கு உங்கள் 
நடவடிக்கை இருக்கவேண்டும் என்கின்றார் ஆசிரியர். 
இதெல்லாம் எழுதுவதற்கும் படிப் பதற்கும் நன்றாயிருக்கும். எப்படி இதை 
யெல்லாம் திட்டமிட்டுச் செய்வது. சாத்தியமில்லாததைப் போல் இருக் கின்றதே என
 என்னுடைய வாடிக்கை யாளர்கள் என்னிடம் கேட்டதைப் போல் நீங்கள் நினைக்கலாம் 
என்று சொல்லும் ஆசிரியர் தொடர்ந்து இந்த மாடலில் சொல்லப்பட்டிருப்பவற்றை 
செக்லிஸ்ட் போல் வைத்துக்கொண்டு உபயோகித்துவந்தால் ஒரு கால கட்டத் தில் 
உங்களின் வாழ்க்கை முறையாகவே அது மாறிவிடும் என்பதைத்தான் நான் அவர்களுக்கு
 சொல்லவும் என்னுடைய பேச்சுத்திறனால் உணர்த்தவும் செய் கின்றேன் 
என்கின்றார். 
எண்ணத்தை செயலாக மாற்றவும், பவர்புல்லான தலைவனாகத் திகழவும் தலைவனுக்குத் 
தேவையானதும் உதவு வதும் பேச்சுத்திறன் மட்டுமே. இந்தப் புத்தகத்தில் 
சொல்லப்பட்டிருக்கும் வழியினைப் பின்பற்றினால் ஓவ்வொரு முறை பேசும் போதும் 
நீங்கள் தலைவனாகவே உணரப்படுவீர்கள் என்கின்றார் ஆசிரியர். பின்பற்றிப் 
பயனடையுங்களேன்.
No comments:
Post a Comment